Posts Tagged ‘நான்’

 

 

 

 

 

 

 

 

நீ கேட்பதற்காகவே வைத்த என்
அலைப்பேசியின் ஒலி நாதத்தை
உன்னைத் தவிர எல்லோரும் கேட்கிறார்கள்…
நீ மட்டும் இன்னும் கேட்கவில்லை
தவறாக என் எண்ணுக்கு அழைக்கும்
நபர்கள் கூட சரியாக கேட்கும் என்
அலை நாதத்தை நீ மட்டும் இன்னும்
ஒரு முறைக் கூட
கேட்காதது வருத்தம் தான்…
என்றேனும் நீ என் அலைப்பேசி
எண்ணுக்கு அழைக்கும் பொழுது
இந்த ஒலி நாதத்தை நீ
நிறைய முறைக் கேட்பாயெனில்
நான் எடுக்க இயலாமல் இருக்கிறேன்
என்று எண்ண வேண்டாம்
உயிரோடு இருக்க முடியாமல் இருக்கிறேன்
என்பதை எண்ணிக் கொள்ளடி
என் அன்பு காதலியே…
அந்த ஒலி நாதம்  உனக்கு சொல்லும்
என் உயிர் நாதம் நின்று விட்டதை
அந்நொடி..

வாழ்க்கைத் துணையை தேடிக் கொள்ளும் வயதில்
நான் இருப்பதாக பலர் சொல்கிறார்கள்
இந்த வயது வரை வாழ்க்கையென்றால் என்னவென்றே
தெரியவில்லை,இதில் துணை வேறு அவசியமா?
இந்த நொடி வரை என் வாழ்க்கை துணையின்றி
நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது.
என் அழகான நாட்கள் எல்லாம் நொடிகளில்
நிகழ்வில் நடந்துக் கொண்டிருக்க
வரும் காலத்தில் சந்திக்கும் துணையைப்
பற்றி ஏன் நான் கவலைப் பட வேண்டும்.
ஒருவர் மீது மட்டுமே அன்பு செலுத்த வேண்டும்
என்ற கட்டாயத்தை ஏற்படுத்திக் கொள்ள
நான் இன்றைய மனிதனில்லை…
என் வயது அன்பின் வயது
என் அன்பு எல்லோருக்கும் சொந்தமானது
உடலின் தேவையை வைத்து அன்பின்
ஆழத்தை கணக்கிடும் மனப்பாட மூளைக்களுக்கு
எப்படித் தெரியும்
என் அன்பின் வயதும் மனதும்
நானும் மனிதனென்பதால் என் தலையிலும்
உடலின் வேட்கையை அடிக்கடி கிளறி விடும்
இயற்கையின் இயல்பு நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
என் மூலம் ஒரு உயிரை உண்டாக்க நினைக்கும்
இந்த இயற்கையோடு நானும் விளையாடிக் கொண்டுத்
தான் இருக்கிறேன்,தோற்று விடுவேன் என்று
தெரிந்தாலும் அது வரை விளையாடிக்
கொண்டிருப்பேன்.
மரணம் வரை வாழ்வது போல்…
என் அன்பின் ஆழத்தை உடலின்
சங்கமத்தில் தான் வெளிப்படுத்த முடியுமென்றால்
இத்தனை ஆண்டுகள் அன்பை வெளிபடுத்தத்
திரானியற்றவனாக அல்லவா ஆகி விடுகிறேன்.
நிச்சயம் அப்படியில்லை என்னை ஆணாக
நிருபிக்கவோ? இல்லை பெண்ணாக நிருபிக்கவோ?
தூண்டும்  உண்ர்வில் மிருகம் மட்டுமே
இருக்கிறது,
அன்பை எங்கே அங்குத் தேடுவது.
ஒரு ஆணாகவோ! ஒரு பெண்ணாகவோ
இருந்து அன்பை உணர்வது மிகவும் கடினம்
ஒரு உயிரினமாக இருந்து அன்பை உணர்வது
மிகவும் எளிமையாக இருப்பதால்
என்னை ஒரு உயிரினமாகவே நினைக்க
பழகிக் கொண்டு வருகிறேன்.
இடையில் பாலின ஈர்ப்பு குறுக்கிடாமல்
இல்லை.
அந்த நொடி எனக்குள் என்ன நிகழ்கிறதோ
அதை அனுபவித்து ஆனந்திக்கிறேன்
நொடிக்கொரு முறை நான் மாறிக் கொண்டுத்
தான் இருக்கிறேன்,ஒரு மல்லிகைப் பூவாக
என்னை உணர்கிறேன்.
பிரம்மாண்டமான சிகரமாக என் மேல்
பல உயிரினங்கள் வாழ்வதை என் மேல்
உணர முடிகிறது
இது துறவு அல்ல விருப்பம்,
பற்று,காதல்,நட்பு,காமம் இன்னும்
என்னவெல்லாமோ
உலகமல்ல இந்த பிரபஞ்சத்தையே
விரும்பும் முயற்சி……
இதில் நீ நான் நாம் என்ற பாகுபாடில்லை
எல்லாமே நானாக இருக்கையில்
எனக்கு துணையை எங்குத் தேடுவது
என் சிரிப்புக்கும் நானே ரசிகனாக இருக்கும்
பொழுது,எதைக் கொண்டாட எதை வசைப்பாட
தவறுகளும் திருத்தங்களூம் எனகுள்ளேயே
நடக்க வெளியில் தவறையோ திருத்தங்களையோ
தேடி அலைவதில் என்ன கிடைத்து விடப் போகிறது.
எத்தனை தேடினாலும் இறுதியில் என்னையே தான்
நான் கண்டுபிடிக்கிறேன், இதில் எந்த நானை என்
துணையாக தேர்வு செய்வது.
என்னை பாலின ஈர்ப்பில் மூழ்கடிக்கும் பொழுது
மட்டுமே உணர முடிகிறது
இந்த உடலுக்கு ஒரு உடல் தேவையென்று….
ஒரு உடலில் மட்டுமே முடிந்து விடக் கூடியதா
எனக்குள் இருக்கும் தேடல் என்று
எண்ணுகையில் தான் மீண்டும் அந்த ஈர்ப்பில்
இருந்து மீள முயற்சிக்கிறேன்
மீண்டும் மீண்டும் விழுந்து விழுந்து எழுந்தும்
தொடர்கிறது எனக்கான தேடல்……..
அன்பினால் மட்டுமே கண்டுபிடிக்க
இயலும் எனக்கான தேடலை

என் உறக்கத்தை இயக்கும் இரவு
என் உயிரை இயக்கும் இதயம்
இரண்டிற்கும் இடையில் நீ
வந்து ஏன் இயங்க மறுக்கிறாய்
என்னுள் அமைதியை இயக்கும்
முயற்சியை நான் செய்கிறேன்
அந்த முயற்சியை உன் சத்தமிடாத
மௌனம் களைத்துவிடுகிறது
உன் சத்தங்களில் தான் என்
மௌனம் இயங்குகிறது.
மெல்ல மெல்ல உன் சிரிப்பின்
சத்தம் என்னை அமைதி
படுத்துகிறது.
உன் இயக்கத்தில் தான் என்
அமைதி
அமைதியில் என் உறக்கம்
என் உறக்கத்தில் தான் உன்
உயிரின் இயக்கம் உணர்கிறேன்
என் இதயத்தில்…

leighton-181.jpg

இன்றும் நான் பேருந்தில் தான்

பயணம் செய்து கொண்டிருக்கிறேன்

நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து…….
 

உன்னுடைய விமானப் பயணம்

எப்படி இருந்த தென்று

நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள்

என்னைத் தவிர……. .
 

என்னுடைய விசாரிப்பை

நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய்

என்பதை நானறிவேன்

நம்முடைய வாழ்க்கை தான்

எவ்வளவு சீக்கிரத்தில்

எதார்த்தத்தின் நிழலில்

சரணடைந்து விட்டது………
 

என்னுடைய டைரியில்

உனது பெயர் இடம்பெறுவது

அரிதாகிவிட்டது

உனது நினைவை எப்பொழுதாவது

ஒரு முறைத் தூண்டும்

கனவு கூட இப்பொழுதெல்லாம்

வருவதில்லை

நான் உறங்குவதே இல்லையென்பதால்….
 

எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா!

உன்னை மறந்ததில் எனக்கு…

பெருமிதமாக்த் தான் இருந்தேன்

உன் குரலை அலைப் பேசியில்

கேட்கும் வரை……
 

எப்படி இருக்கிறாய்?

என உன் குரல்

ஒலிக்கையில்…..

நலமென்று சொல்ல மட்டும்

பொய்யெனக்கு வரவில்லை
ஆனால் நீ மட்டும் சொன்னாய்…….

pineppadipaarkaathe16pp1.jpgmuthasanthampaarkaathee9jn1.jpg

உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்
யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய்
உன்னுடைய முத்தம் அவ்வளவு
அழுத்தமான சத்த முத்தமோ!
என்றேன்…………..
உன்னீரு கண்களால் என்னை
எரித்து விடுவதைப் போல
பார்த்தாய்……………….
உன் கோபம் நான் சொன்ன
உண்மையிலா! இல்லை
சொல்லாது விட்ட பொய்யிலா!
என்றேன்எது உண்மை? எது பொய்?
தெரியாதவள் போல் கேட்டாய்
நீ கொடுப்பதாய் சொன்ன
உன் முத்தம் உண்மை
நீ கோபிப்பதாய் நடிக்கும்
உன் கண்கள் பொய்யென்றேன்
மௌனமானாய்!!
இந்த மௌனம் முத்தத்திற்கான
சம்மதமோ! கேட்டேன்
வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ
உன் வெட்கத்தின் அழகை
காணத் தானே இத்தனை
முயற்சியும்
மகிழ்ச்சியில் நான்…………..