ஏப்ரல், 2008 க்கான தொகுப்பு

50.jpg

கவிதை என்றதும் உன் ஞாபகம் —வருகிறதென்றேன்
கண்கள் கசக்கினாய்
உனக்கு என் ஞாபகம்
வர நீ என்னை மறந்தால்
தானே முடியும் என்னை மறக்கின்றாயா? —என்றாய்
என்ன பதில் சொல்வது
இல்லை! இல்லை! –என்றேன்
பின்பு கவிதை என்றதும்
யார் ஞாபகம் வருகிறது –என்றாய்…
பேச முடியாமல் விழித்தேன்
பொய் சொல்ல கற்றுக் கொண்டாய் நீ ! என்றாய்
கவிதை எழுதுகிறேனே ! என்றதும்
முறைத்தாய்…
அப்படியென்றால் என்னை பொய் என்கிறாயா?
யார் அப்படி சொன்னது—
பின்பு கவிதை என்றதும்
என் ஞாபகம் வருவதாகச் சொன்னாயே…
அய்யோ! கடவுளே!
ஏன் நான் என்ன அவ்வளவு
கொடுமைக் காரியா?
கடவுளை கூப்பிட.. என்றாய்…
கண்கள் விரிய உன்னைப்
பார்த்தேன்
ஓ! என்னை பார்வையாலேயே
எரிக்கப் பார்க்கிறீர்களோ!
கண்களை மூடிக் கொண்டேன்
என்னைப் பார்க்க பிடிக்கவில்லை
என்றால் ஏன் என்னை அழைத்தீர்?
அமைதியாக இரு கொஞ்ச நேரம்—என்றதும்
அப்படியென்றால் இவ்வளவு
நேரம் நான் என்ன உங்கள்
அமைதியை கெடுத்துக் கொண்டிருந்தேனே..
என்றபடி என்னை விட்டு விலகிச்
சென்ற உன் கரங்களை பற்றி இழுத்தேன் …
விடுங்கள்! என்று நீ சொல்லியும்
உன் கரங்களை நான் என்
முகத்தருகே கொண்டு சென்றேன்
மேலும் கோபம் கொண்ட நீ
வெடுக்’ கென்று உன் கரங்களை
எடுக்க என் கண்களை உன் விரல்கள்
பதம் பார்த்தன
ஆ’ வென்று என் கண்களில்
நான் கை வைக்க
நீயோ பதறிய படி
என் அருகில் வந்து
இமைகளை விரிக்கச்
சொல்லி உன் மெல்லிய
சுவாசத்தால் எனக்கு இதமளித்தாய்
உனது சுவாசத்தின் கதகதப்பில்
மறைந்து போனது எனது வலிகள்

glittering_girl_animation_1.gif

தலைவணங்குகிறது

கற்பூர தீபத்தைக் காட்டுகையில்
எல்லோரும் கை கூப்பித் தலைவணங்கினர்
என்ன அதிசயம்! அதுவோ!
உன்னைக் கண்டு
தலைவணங்குகிறது………
அதற்கும் தெரிந்திருக்கிறது நீ
என்னுடைய தெய்வமென்று…………………..

அனுமதிப்பதில்லை

கண்ணீரை என் தோட்டத்தில்
என்றுமே நான் அனுமதித்ததில்லை
ஏனோ அதனாலேயே பூக்களையும்
நான் அனுமதிப்பதில்லை
ஏனென்று கேட்கிறாயா?
தன்னை காட்டிலும் ஓர்
மென்மையான அழகா!என்று
உன்னை கண்டதும்
கண்ணீர் விடுகின்றது பூக்கள்
என்ன செய்ய……………..

என்னைப் பார்த்து நீ……

துறவியென்றாய் என்னைப் பார்த்து நீ……..
இல்லை! நான் துறவியைக் காட்டிலும்
மேன்மையானவன்
துறவியால் தன் உயிரின் உருவத்தை
காண இயலாது
அதைத் தேடியே தன் வாழ்நாளை
வீணடிப்பவன்
நானோ! அதை என்னருகிலேயே காண்கிறேன்
இதோ என்னுயிர் சிரிக்கிறது,
பேசுகிறது, அசைகிறது
அழகாக வெட்கப்படுகிறது
என்று உன்னை கைக் காட்ட
நீயோ! உன் இரண்டு கைகளாலும்
முகத்தை மூடியபடி
உனக்கு ஒரு கும்பிடு என்றாய் ……
என்னைப் பார்த்து
ஆ! என்னுயிருக்கு கும்பிடவும் தெரிந்திருக்கிறது


இந்த அரச மரத்தடியில்
இன்று மட்டும் ஏனோ
அம்மன் குடிவந்தது
நீ அமர்ந்ததைப் பார்த்தால்
எனக்கு வேறொன்றும் சொல்லத்
தோன்றவில்லை…
என்று எனக்காக காத்திருந்த
உன்னிடம் சொன்னேன் —-.
முறைப்பாக இருந்த உன்னை
என் பேச்சு மேலும் கோபப்படுத்தியது
அம்மனுக்கு கோபம் வந்தால்
இந்த அடியேன் என்னாவது
பார்வையாலையே எரித்துவிடுவாய்
போல் இருக்கிறதே– என்றேன்
சற்று உன் முகம் சாந்தமானது
அம்மனுக்குப் பூ எங்கே?
என்று என்னை மடக்கினாய்—
மன்னித்துவிடு! உன் கூந்தலில்
எந்தப் பூவும் இடம் பெறமறுக்கிறது…
கோபத்தை மறந்து என் இதழ்களையே
கண் கொட்ட ஆச்சரியத்தில் பார்த்து
ஏன்? என்றாய்—
என்னை பொறாமைத் தீயில்
தள்ள நினைக்காதே அதிஷ்டக்காரானே!
அவளைப் பார்த்து பொறாமை
கொள்ள எங்களுக்கு மனமில்லை
என்று கெஞ்சுகிறது அத்தனைப்பூக்களும்….
என்றேன்.உன் முகம் மாறிய நளினங்களை
எந்தப் புகைப்படக் கருவியில்
நான் பதிவு செய்ய – என்
மனத் திரையைத் தவிர…
மேலும் கேட்டாய்—- சரி
அது என்ன அதிஷ்டக்காரன்?
உனக்கு சொந்தம் அல்லவா!
அதனால் சொல்லியிருக்கும்
என்றேன்….கிண்டலான
ஒரு பார்வை பார்த்தாய்
வேறு என்ன சொன்னது?
இருந்தாலும் பாவம் நீ
என்றது—- என்று மேலும்
சொல்லாமல் நிறுத்தினேன்.
ஏன்? நிறுத்துவிட்டாய்
சொல் ஏன் பாவம் நீ
என்ன சொன்னது?
என்று ஆர்வத்தோடு நீ கேட்க…
லேசான தயக்கத்துடன்
பூக்கள் நாங்கள் எங்கள்
அழகை மறைப்பதில்லை
உன்னவளோ ஆடைகொண்டு
அவள் அழகை மறைத்துவிடுகிறாள்
பாவம் தானே நீஎன்றது —-என்றேன்
நொடியில் உன் முகத்தில்
மின்னிய அந்த ஒளிச் சிதறலில்
நான் எரிந்து போகாதது ஆச்சரியமே!
திருடா! என்று என் தலையினை
பிடித்துக் கொண்டாய் …
என் தலை எழுத்து அன்று
சீக்கிரம் பொழுது சாய்ந்தது