தமிழ் ராஜா எழுதியவை | ஆகஸ்ட் 26, 2008

உன் சத்தமிடாத மௌனம்

என் உறக்கத்தை இயக்கும் இரவு
என் உயிரை இயக்கும் இதயம்
இரண்டிற்கும் இடையில் நீ
வந்து ஏன் இயங்க மறுக்கிறாய்
என்னுள் அமைதியை இயக்கும்
முயற்சியை நான் செய்கிறேன்
அந்த முயற்சியை உன் சத்தமிடாத
மௌனம் களைத்துவிடுகிறது
உன் சத்தங்களில் தான் என்
மௌனம் இயங்குகிறது.
மெல்ல மெல்ல உன் சிரிப்பின்
சத்தம் என்னை அமைதி
படுத்துகிறது.
உன் இயக்கத்தில் தான் என்
அமைதி
அமைதியில் என் உறக்கம்
என் உறக்கத்தில் தான் உன்
உயிரின் இயக்கம் உணர்கிறேன்
என் இதயத்தில்…

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்