தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 9, 2008

உன் அன்பினை நிரப்ப வருவாய் என………………

 

 

உனக்கான வார்த்தைகளை நான் 
தேடுவது இப்பொழுதெல்லாம் 
குறைந்து விட்டது. 
வார்த்தைகளின் தோல்விகள் 
என் நெஞ்சில் எந்த சலனத்தையும் 
உண்டு செய்யவில்லை 
அதற்கு மாறாய் உன் மீதான 
புரிதலைத் தான் ஆழமாக்கியது 
உன் மௌன குறியீடுகளில் 
உள்ள அன்பின் நீண்ட வாசகங்களை போல் 
உன் வார்த்தைகளுக்கு என் மனதை 
ஊடுருவும் சக்தி இல்லை
இறப்பின் சுவையறியும் பொழுது
தான் என் மனதில் உனக்கான
நேசிப்பின் துளிர்வை உணர்ந்தேன்
மனதின் வெறுமையான பக்கங்களை
நீ மட்டுமே நிரப்புவதாக உணர்ந்தேன்
உன் சுவாசப் பையினை நிரப்ப
வேண்டிய உயிர் காற்றினை
சுமந்தபடி நிற்கும் மரம் நான்
உன் நிழலுக்காக காத்திருக்கிறேன்
இலைகளற்ற கிளைகளில் உன் 
அன்பினை நிரப்ப வருவாய் என………………


மறுவினைகள்

  1. super kavithai , very use full for me , thanks ,

    valga valmudan


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்