தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 4, 2008

என் நிகழ்வுகள்

அவள் நாசிகளை தொட்ட காற்றை
சுவாசிக்கவே நான் வாழ்கிறேன்
அவள் மனதினை அசைக்கவே
என் ஒவ்வொரு அசைவுகளும் நிகழ்கிறது
அவள் நீரோட்டமான மனதில் என்
நிகழ்வுகள் பாசிப் போல் பசுமையாக
இருக்கவே பாடுபபடுகிறேன்
அவள் இதய துடிப்பில்
என் காதல் அணுஅணுவாய்
நுழைத்திடவே காத்திருக்கிறேன்
அவள் நிழலிணை
என் உயிர் தொடர்ந்திடவே
ஒவ்வொரு நொடியும் முயல்கிறேன்
அவள் மொழிகளை
என் மனதில் பதித்திடவே
ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கிறேன்
அவள் முகத்தினில்
என் முகம் பிரதிபலிக்கவே
சுடரில் புறப்பட்டஒளியாய் திரிகிறேன்
அவள் இதழ் சிந்தும் நீரை
சுவைத்திடவே தேன் மொய்க்கும்
வண்டுகள் தேடி அலைக்கிறேன்
அவள் காதினில் நுழையும் ஓசையில்
என் மொழி கலந்திடவே
மென்மையான காற்றாக்கிறேன்
அவள் மடி மீது கண் உறங்கிடவே
என் உயிர் மொத்தத்தையும் உறங்க வைக்கிறேன்


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்