தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 4, 2008

உன் சிணுங்களை

பார்க்கக் கூட வெட்கப் பட்டால்
உனக்கு என் முகம் மறந்துவிடாது
என்றதும் , ஒரு பார்வைப் பார்த்தாயே நீ!
என் ஆயூளில் மறக்க முடியாது
அந்தப் பார்வையை…
என்னப் பேசுவது என்றுத் தெரியாமல்
விழித்த என்னைப் பார்த்து
பயந்துட்டி யா? என்றாயே
குல தெய்வத்தைப் பார்த்து
யாரேனும் பயப்படுவார்களா?
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில்
லேசாகப் புன்னகைத்தாய் நீ!
என்னை தெய்வம் என்றா சொல்கிறாய்
அப்படியென்றால் எனக்கு கோவில் எங்கே?
என இரு கைகளையும் சேர்த்துக் காட்டினாய்…
என் இடப் பக்க மார்பில் கை
வைத்து நான்காட்டினேன் இங்கேயென்று!
உன் முகம் சற்றே ஒரு சிணுங்களை
வெளிப்படித்தியது.
என் நினைவுப் பெட்டகத்தில்
ஒரு நொடியில்
பதிவு செய்யப் பட்டது
அந்தக் காட்சி
இன்னும் ஒரு முறையென்று மனம்
ஏங்க , மீண்டும் முயற்சியில் இறங்கியது
உதடுகள் அந்த சிணுங்களை காண…


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்