தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 3, 2008

பூக்களின் பாதுகாப்பு


நமக்குள் நட்பு வளர்ந்த நொடிகளை
கடிகார முற்கள் கணித்ததில்லை
நாடிகளில் செல்லும் ரத்த
ஒட்டங்களே அதற்கு சாட்சி
வருத்தத்தின் விபரீதங்கள்
அறியாததினால் உன்னிடம்
பேசாத நாட்கள்
ஒட்டு மொத்த வருத்த்தின்
கடிதங்களும் என் இதயமுகவரிக்கு
வந்தது போல் ஓர் உணர்வு
சொற்களும் குத்து மென்று
இது வரை அறிந்ததில்லை
“மன்னிப்பு” என்று நீ முதலில்
சொல்லும் வரை…
நான் செய்த தவறுக்கு

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்