உனக்குள்ளேயே உன்னைத் தேடிப் பார்
உன்னை முன்னிறுத்தி உன்னை
காண முயற்சி செய்
அங்கே நீ இருக்க மாட்டாய்
நானிருப்பேன்
தலைவலிக்கு தடவும் மருந்தினை
முயற்சி செய்யாதே
உனக்கு தலை வலியல்ல
பசிக்கிறது என்று சொல்லிக் கொண்டு
ரூசிக்க நினைக்காதே
இது பசியும் அல்ல
நினைத்துப் பார்க்கவே முடியாத
அளவு பறந்து விரிந்த
விண்வெளியைப் போல்
உன்னுள் ஒரு உணர்வு
உன்னைப் பனித் துளியைப் பற்றி
திடீரென பறக்கச் செய்கிறதா
நொடிகளை துடிக்கச் செய்யாமல்
காலம் மட்டும் உன்னை நம்பி
உன் காலடியில் நாயைப் போல்
சுற்றி வருகிறதா
இருந்தும் உன்னால் ஒரு நொடியைக்
கூட நகர்த்த முடியாது
ஆனால் நாட்களோ கண் சீமுட்டுவதற்குள்
காணாமல் போகும்
வருடங்கள் தொலையுமுன் நீ
தொலைந்ததை உணர்ந்து விடு
இல்லையெனில் காலத்தோடு
உன் கனவுகளும் கடந்துவிடும்
தமிழ் ராஜா எழுதியவை | ஜூன் 18, 2008
