நீ வருவதற்கு முன்னால்
இங்கு புறாக்கள் சுற்றிக்
கொண்டிருந்தது என்றேன்
எப்பொழுதுமே என்னால்
புறாக்களை காண முடிவதிலலை
என்று லேசாக சிணுங்கினாய்
இல்லை! இல்லை! பறவைகளையே
என்னால் காண முடிவதில்லை ஏன்?
என்று வருத்தப்பட்டாய் என்னிடம்
நீ வெளியே வந்ததும்
உன் கூந்தலைப் பார்த்துக்
கார் மேகம் சூழ்ந்து கொண்டதாக
நினைத்துக் கொண்டது பறவைகள்…….
அதனாலேயே உன்னைப் பார்த்ததும்
எல்லாப் பறவைகளும் கூண்டுக்குள்
சென்று விடுகிறது என்றேன்….
அமைதியாக இருந்த உன் முகம்
லேசாக சிவந்தது கோபத்தால்
சே! இதை மட்டும் பறவைகள்
பார்த்திருந்தால் உன் பின்னாலேயே
விடாமல் சுற்றி வருமென்றேன்
என்ன செய்வது?
அதை உன் கருங்கூந்தல்
மறைப்பதால் பறவைகளால்
காண முடிவதில்லை என்றதும்
உன் சிவந்த முகத்தில்
பளிச்சென்ற வெண்மைப் புன்னகை…
என் காதுகளில் லேசாகப் பாய்ந்தது
உன் சிரிப்பின் இசை…………..
அய்யோ! நான் குடை கொண்டு வரவில்லையே
மின்னலும் இடியும் சேர்ந்து
வருகிறதே என்றதும்………..
மேலும் என் வார்த்தைகளை
பொறுக்க முடியாமல்
உன் விரல்களால் என்னிதழை
மூடினாய் மெதுவாக
அந்நொடி ஊமையானேன் நான்…………………………………
உன் புன்னகை…
Posted: செப்டம்பர் 19, 2007 in காதல்குறிச்சொற்கள்:இசை, கருங்கூந்தல், கார் மேகம், கூந்தல், புன்னகை
மறுமொழிகள்










ரொம்ப அருமை……….ரசிக்க வைக்கிறது கவிதை வரிகளும் வார்த்தைகளும்…………..
கவிதையின் புகைப்படத்தை பார்த்ததும் நான் ஊமையானேன்………………..