தாய் மடியில் அனுபவித்த முதல் வலியை அனுபவிக்க ஆசை அந்த நினைவற்ற வலிகளுடனே இருந்திருக்கக்கூடாதா என்றாசை என் மேனி சிந்திய முதல் ரத்தத்தை பார்க்கா சை — அதுவே நான் சிந்திய கடைசி ரத்தமாகி இருக்கக்கூடாதா என்றாசை பள்ளி சென்ற முதல் நாளை எப்படியாவது வாங்க ஆசை பக்குவப்படாமல் பள்ளிக் குள்ளேயே இருந்துவிட ஆசை பழகும் பொழுது நல்ல நட்பிற்குஆசை அந்த நட்பினிலும் சிறந்த மனிதரைகாண ஆசை பிரிந்திடினும் எனை மறவா நண்பனுக்கு ஆசை அந்த நண்பணிடமும் எனக்குரிய உரிமைக்கு ஆசை மறந்திடினும் ஒரு முறையாவது காதலிக்க ஆசை அந்த காதலிலும் எனக்குரியவ ளி டம் ஊடலுக்குஆசை ஒரு முறையாவது எனக்குரியவளை தொட்டு விடஆசை அந்தத் தொடு உணர்வும் திருமணத்திற்கு பின்னிருக்கஆசை பத்து மாதம் எனக்குரியவளின் பாரம் சுமக்க ஆசை ஈன்று எடுக்கும் பொழுது என்னவளுடன் வலி தாங்க ஆசை என்னால் தோன்றிய உயிரை உன்னதமாக்க ஆசை அந்த முயற்சியிலும் என்னவள் உணர்வு கலக்க ஆசை இருக்கும் வரைக்கும் இன்பத்திற்கே ஆசை இறக்கும் பொழுதும் துன்பம் வராமலிருக்க ஆசை கல்லறை யிலும் உறக்கமில்லா ஆசை அடுத்த ஜென்மம் ஒன்றிருந்தால் ஆசையில்லா ஜென்மமாகப் பிறக்க ஆசை………………………………….
செப்டம்பர், 2007 க்கான தொகுப்பு
எண்ணிலா ஆசைகள்
Posted: செப்டம்பர் 27, 2007 in நட்பு, ரோஜாகுறிச்சொற்கள்:அம்மா, ஆசை, எண்ணம், தாய் மடி, முதல் வலி, ரோஜா, வரவேற்று, வலி
காற்றில் வந்து காதில் வீழ்ந்த முதல் சொல்லைப் பல் முளைக்கும் முன் சொல்ல ஆசைப்பட்டு எண்ணிலா எண்ணம் வளர்த்தேன் அந்த எண்ணத்தில் தான் அம்மா என்றுரைத்தேன் பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம் நண்பனாக்கி தூக்கத்திலும் துள்ளி குதித்தேன் துவண்டு விழுந்தாலும் தூக்கிவிடும் அன்பை ரசித்தேன்……………… புத்தகத்தைப் பார்த்தத்ப் பொழுது பல பக்கம் ரசித்தேன்…………. அந்த பக்கத்தில் பார்த்த புது படத்தை ரசித்தேன்……… அழுது கொண்டு பள்ளிச் செல்லும் நேரம் சனி ஞாயிற்றை ரசித்தேன்……………… இன்று சிரித்துக்கொண்டே வரவேற்று பள்ளி நாட்களுக்கு துடித்தேன் விண்மீன்களை எல்லாம் கைக்குள் அடக்க வேண்டுமென கல்லூரிக்குள் காலடி வைக்கும் பொழுது நினைத்தேன் காலடி பதிக்கும் முன்னரே காதலின் அடியை அறிய ஆசைப்பட்டேன் காதலியை காதலிக்க ஆசை அவளும் நம்மை மட்டுமே காதலிக்க ஆசை கல்லூரித்தேர்வே காதலுக்கென்று ஆசை தேர்வில் காதல் அலீகளின் வெற்றியை பார்த்ததும் காதலை விட்டு ஓட ஆசை அன்பை விட்டு அழகுக்கு ஆசை அழகும் அழிந்துவிடுமோ! என்றெண்ணி புகழுக்கு ஆசை புகழுக்காக தொடர்ந்த படிப்பை தொய்வில்லாமல் முடித்துவிட ஆசை பார்வையில் பணம் பார்க்க ஆசை பார்த்த பின்னும் விலக்க முடியாத ஆசை காமத்திற்கு ஆசை – அதனோடு கவுரவ த்திற்கு ஆசை திருமணத்தோடு திருடிவிட்ட ஆசைகளை எல்லாம் திருப்பிக் கொடுக்க ஆசை நம் போல் ஒரு பிள்ளை நமக்குப் பிறக்க ஆசை நமக்காக துடிக்கும் ஓர் உள்ளத்தை நண்பனாக்க ஆசை நகம் நனைக்கும் வயதில் நட்பை உதைத்த தோசம் நரை வந்த பின்னும் நண்பனைத் தேடும் [...]
உன் புன்னகை…
Posted: செப்டம்பர் 19, 2007 in காதல்குறிச்சொற்கள்:இசை, கருங்கூந்தல், கார் மேகம், கூந்தல், புன்னகை
நீ வருவதற்கு முன்னால் இங்கு புறாக்கள் சுற்றிக் கொண்டிருந்தது என்றேன் எப்பொழுதுமே என்னால் புறாக்களை காண முடிவதிலலை என்று லேசாக சிணுங்கினாய் இல்லை! இல்லை! பறவைகளையே என்னால் காண முடிவதில்லை ஏன்? என்று வருத்தப்பட்டாய் என்னிடம் நீ வெளியே வந்ததும் உன் கூந்தலைப் பார்த்துக் கார் மேகம் சூழ்ந்து கொண்டதாக நினைத்துக் கொண்டது பறவைகள்……. அதனாலேயே உன்னைப் பார்த்ததும் எல்லாப் பறவைகளும் கூண்டுக்குள் சென்று விடுகிறது என்றேன்…. அமைதியாக இருந்த உன் முகம் லேசாக சிவந்தது கோபத்தால் [...]
உன்னை முதன்முதலாய் தொட்டுத் தூக்கையில் என்னுயிர் மறுமுறை ஜணிக்கின்ற வலியை உணர்ந்தேன் கண்ணே ! உன்னை நெஞ்சோடு அணைக்கையில் தான் வலியே சுகமாய் நிலைப்பதை உணர்ந்தேன் கண்ணே! அடிக்கடி நீ சிரிக்கும் பொழுது தான் உள்ளம் அழகழகாய் மாறுதே! நொடிக்கொருமுறை நீ அழுகையில் தான் உயிரும் அதிர்வது போல் உள்ளதே! படபடவென்று உன் கைகள் அசையத்தான் கண்களில் உற்சாகம் பொங்குதே! சரசரவென்று உன் உடல் நகர்ந்திடத்தான் பூமியின் போக்கே மாறுதே! மடிமீது நீ தவழ்ந்திடத்தான் மனதுக்குள் மத்தாப்பு பூக்குதே! எப்பொழுது உன் மழலை மொழி கேட்பேன் என்னுயிர் துடிக்குதே! என் ஒரு [...]








