என் உள்ளங்கையில் முகம் புதைத்து நீ அழுத நினைவிருக்கு. உன் கண்ணிரண்டில் நீர் பெருக என் விரலால் துடைத்த நினைவிருக்கு நேசம் வைத்த உன் விழியில் பாச நீரைப் பார்க்க மனம் பொறுக்கலையே! பூவாசம் கண்ட உறவில் பிரிவு தோக்ஷம் காண மனம் நினைக்கலையே! என் தேகம் தொட்ட உன் மனதில் நுனி நினைவை க் கூட நான் வைக்கலையே! என் மனதை தொட்ட உன் நினைவில் துளி நொடிகள் கூட [...]
ஆகஸ்ட், 2007 க்கான தொகுப்பு
என் உள்ளங்கையில்
Posted: ஆகஸ்ட் 29, 2007 in காதல்குறிச்சொற்கள்:இடம், என் உள்ளங்கையில், ஏட்டில், துளி, தோக்ஷம், தோல்வி, நினைவிருக்கு, நீர், நுனி, நேசம், நொடிகள், பிரிவு, பூட்டி, பூவாசம், மாயமடி, மெல்ல, வாட்டி, விழியில்
ஏதோ உலகத்தில் பிறந்து விட்டோம் அதனாலே உறவை வளர்த்துவிட்டோம் பாதம் மண்ணில் படியும் வரை பறவைகள் போலே வாழக் கற்றோம் தேடுதல் நிறைந்த வாழ்வினிலே பாம்புகள் போலே ஊர்ந்திருக்கோம் மாணிக்கம் கண்ணில் படும் வரையில் பலரை நாமும் சீறவிட்டோம் பட்டினி ஒன்றை நாம் மறந்தால் வாழ்வில் வேதனை எதுவுமில்லை படுக்கும் நாளை நினைத்தபடியே பசியை நாமும் திர்த்திருக்கோம் சின்னக் காகிதம் பெரிதாய் தெரிவதனால் செல்வம் எதுவென மறந்துவிட்டோம் புள்ளிக் கோலங்கள் போல் தான் நம் வாழ்வும் நாளையும் வேறொன்று தோன்றிவிடும் சிரிப்பதை [...]
உன் மௌனம்………….
Posted: ஆகஸ்ட் 19, 2007 in ரோஜாகுறிச்சொற்கள்:இரவு, உன் மௌனம், கொஞ்சம் பேசேன், கோபம், நூலிழை, மெல்லிய, ரகசியநொடிகளை, ரோஜா, வார்த்தை
எனது வெட்க்கத்தின் வேர்களில் தண்ணீர் ஊற்றியவன் நீ எனது இரவுகளின் ரகசியநொடிகளை நீளச் செய்தவன் நீ என் மனதின் ஒவ்வொரு அசைவும் உன் நினைவெனும் மெல்லிய நூலிழையால் பிணைக்கப்பட்டிருக்கிறது அன்பை வெளிக்காட்டுவதில் உன்னைக்காட்டிலும் நான் ஏழை தான் இருப்பினும் அன்பில் வறுமை இல்லை என்னிடம் மூடிய பின்னும் எனது விழிகளில் பார்வை மறைவதிலலை உன் முகம் மட்டுமே எனது மௌனங்களில் வெளிப்படும் அன்பை உன்னால் உணர முடியவில்லை எனும் பொழுது வார்த்தைகளை வெறுக்கிறேன் என் வார்த்தைகளை விட [...]
முதன்முதலாய் நீ என் வீட்டிற்கு வருகிறாய் என்றதும் — என் வீட்டிற்குள் தான் எத்தனை மாற்றங்கள்–உன்னால் நிகழ்ந்தது தெரியுமா? ஆனால் வீட்டினுள் நீ நுழைந்ததும் உன் பார்வையில் அது எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பதில் ஏமாற்றம் தான் எனக்குள் அந்த மாற்றத்தையும் நீ கவனித்துவிட்டாய் நொடியில்………….. என்னவென்ற உன் பார்வைக்கு என்ன சொல்வது நான்…… நீ உள்ளே வந்ததும் தான் வீடு பிரகாசமடைந்து குறைகள் கண்ணுக்குத் தெரிகிறத்தென்றேன் மின்னலாய் ஒரு ஒளி உன் சிரிப்பில் வீடு மேலும் [...]
எதார்த்தத்தின் நிழலில்
Posted: ஆகஸ்ட் 8, 2007 in காதல், ரோஜாகுறிச்சொற்கள்:கனவு, குரல், சரணடைந்து, டைரி, நண்பர்கள், நான், நினைக்காத போதும், பயணம், பொய், மகிழ்ச்சி, வாழ்க்கை
இன்றும் நான் பேருந்தில் தான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் நீ இறங்கிய நிறுத்தத்திலிருந்து……. உன்னுடைய விமானப் பயணம் எப்படி இருந்த தென்று நண்பர்கள் பலர் விசாரித்திருப்பார்கள் என்னைத் தவிர……. . என்னுடைய விசாரிப்பை நீ எதிர்ப்பார்த்திருக்க மாட்டாய் என்பதை நானறிவேன் நம்முடைய வாழ்க்கை தான் எவ்வளவு சீக்கிரத்தில் எதார்த்தத்தின் நிழலில் சரணடைந்து விட்டது……… என்னுடைய டைரியில் உனது பெயர் இடம்பெறுவது அரிதாகிவிட்டது உனது நினைவை எப்பொழுதாவது ஒரு முறைத் தூண்டும் கனவு கூட [...]
என் தலை சீவூம் வயதில்– உனை நினைத்தேனே மனதில் என் இளங்கால வாழ்வில்– உனை இசைத்தேனே நாவில் காற்றென்ற வடிவில் — உனை வரைந்தேனே உருவாய் கரு உருவான சேற்றில்– உனை தாமரையின் வடிவாய் பார்க்கீன்ற பார்வையிலே — உனை பார்த்தால் ரோஜா சேர்க்கின்ற பொழுதினிலே– உனை சூடும் ராஜா பாதங்களில் சேர்ந்திடவே — உனை பாற்கடலாய் வர்ணித்தேன் பாவி மனம் வருந்திடவே — உனை பாதம் தொட மறுத்தேன் நிலவு போல கவிஎழுத — உனை [...]
நரை விழுந்த மனதில் குறையொன்று கண்டேன் குறை கண்ட மனதிலோ! சிறையொன்றைக் கண்டேன் சிறையான மனமோ! தேய்வானது பிறையாய் தூக்கத்தின் மத்தியில் பிதற்றங்கள் பலவும் அதன் தாக்கத்தின் விளைவாய் சோர்வுகள் படரும் பாழாகும் உயிரோ மறந்ததையே நினைக்கும் நோயாகும் உடலோ துறந்தையே கேட்கும் போகின்ற வரையிலும் பூக்காத தெளிவு சேர்கின்ற பொழுது தான் தெளிவாக்கும் பூக்கள் தேகத்தின் மடியில் நினை கின்ற பொழுது உயிர் தாகத்தின் தேடலை யாரறிவாரோ!








