தமிழ் ராஜா எழுதியவை | ஜூன் 26, 2007

ஒரு முத்தம்

pineppadipaarkaathe16pp1.jpgmuthasanthampaarkaathee9jn1.jpg     

உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன்
யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் 
உன்னுடைய முத்தம் அவ்வளவு 
அழுத்தமான சத்த முத்தமோ! 
என்றேன்………….. 
உன்னீரு கண்களால் என்னை 
எரித்து விடுவதைப் போல  
பார்த்தாய்………………. 
உன் கோபம் நான் சொன்ன 
உண்மையிலா! இல்லை 
சொல்லாது விட்ட பொய்யிலா! 
என்றேன்எது உண்மை? எது பொய்? 
தெரியாதவள் போல் கேட்டாய் 
நீ கொடுப்பதாய் சொன்ன 
உன் முத்தம் உண்மை 
நீ கோபிப்பதாய் நடிக்கும் 
உன் கண்கள் பொய்யென்றேன் 
மௌனமானாய்!! 
இந்த மௌனம் முத்தத்திற்கான 
சம்மதமோ! கேட்டேன் 
வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ 
உன் வெட்கத்தின் அழகை 
காணத் தானே இத்தனை 
முயற்சியும் 
மகிழ்ச்சியில் நான்………….. 


மறுவினைகள்

  1. muttham miga saptham

  2. Thanks for ur comment R.Chinnaswamy


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்