உன்னிடம் ஒரு முத்தம் கேட்டேன் யாருமில்லாத இடத்திற்கு வா என்றாய் உன்னுடைய முத்தம் அவ்வளவு அழுத்தமான சத்த முத்தமோ! என்றேன்………….. உன்னீரு கண்களால் என்னை எரித்து விடுவதைப் போல பார்த்தாய்………………. உன் கோபம் நான் சொன்ன உண்மையிலா! இல்லை சொல்லாது விட்ட பொய்யிலா! என்றேன்எது உண்மை? எது பொய்? தெரியாதவள் போல் கேட்டாய் நீ கொடுப்பதாய் சொன்ன உன் முத்தம் உண்மை நீ கோபிப்பதாய் நடிக்கும் உன் கண்கள் பொய்யென்றேன் மௌனமானாய்!! இந்த மௌனம் முத்தத்திற்கான சம்மதமோ! கேட்டேன் வெட்க்கத்தால் தலைக்கவிழ்ந்தாய் நீ உன் வெட்கத்தின் அழகை காணத் தானே இத்தனை முயற்சியும் மகிழ்ச்சியில் நான்…………..
ஜூன், 2007 க்கான தொகுப்பு
ஒரு முத்தம்
Posted: ஜூன் 26, 2007 in முத்தம், ரோஜாகுறிச்சொற்கள்:உண்மை, கண்கள், கோபம், தலைக்கவிழ்ந்தாய், நான், பொய், முத்தம், மௌனம்
5
சித்திரப் பெண்ணழகே !
Posted: ஜூன் 25, 2007 in காதல்குறிச்சொற்கள்:அன்பு, ஆன்மா, கண்ணியமே, கண்மலர், கன்னியே, குற்றமுண்டா, சாரம், சித்திரப்பெண்ணழகே, சொல்லினிக்கும், தமிழ், பாட்டு, பாவை, வர்ணணை
சித்திரப் பெண்ணழகே ! உன்னை என் சிந்தையில் வைத்திடவே கண்மலர் பூத்தி டம்மா பாவையே பார்வை ஒருங்கிடவே என்னையே மனதில் வைத்தாய் என்னுடன் நினைவையும் சேர்த்து வைத்தாய் கண்ணிலே காதலையே கன்னியே என்னுள் ஏன் வைத்தாய் காலத்தின் வர்ணணையில் கன்னியே காதலின் சொல்லினிக்கும் வாழும் தீரத்தில் உள்ளதடி நம் காதலின் கண்ணியமே சேர்ந்து பிரிந்திடினும் பிரிந்து சேர்ந்திடினும் இருக்கும் பொழுதினிலே ஆன்மா இன்பம் களிக்குமடி சேர்ந்தப் பொழுதினிலே உன் அன்பு சாரம் புரியலையே உனை பிரிந்த காலத்தினிலே உனை தவிர யாரும் [...]








