தமிழ் ராஜா எழுதியவை | பெப்ரவரி 13, 2009

துளித் துளியாய் மரணப்பிறப்பு

துளித் துளியாய் மரணப் பிறப்புத்
தரும் காதலே தயவு செய்து
என்னிடம் இப்பொழுது வராதே
இரவில் தூக்கமின்றி இருக்கவோ!
எனக்கு நானே பேசிக் கொள்ளவோ!
பசியிருந்தும் உண்ண மறக்கவோ!
நினைவுகளற்ற நினைவில் இருக்கவோ!
என்னை நானே மறந்து துறக்கவோ!
நான் இன்னும் பழகிக் கொள்ளவில்லை
அதுவும் ஒரு பெண்ணை மனத்துக்குள்ளே
வைக்கும் அளவு என் மனம்                                                                                                                                                                      இன்னும் விரி வடையவில்லை
பிறர் சொன்னதை மனனம் செய்தே
பழக்கப் பட்டவன் நான்
என் பள்ளி பருவம் மனதிற்குள்
அப்படியே இருக்கிறது
 ஓரளவு நல்ல பேரை போலியாக
தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்
அதை நீ  இப்பொழுது கெடுத்து விடாதே
நான் தான் மற்ற எல்லா வற்றையும்
செய்கிறேனே உன்னை தவிர
ஒரு பெண்ணின் நினைவுகளை
மட்டும் என் மனத்திற்குள் போட்டு
குழப்பி விடாதே!                                                                                                                                                                                              தயவு காட்டு
இவ்வளவு கெஞ்சியும் காதல்
என்னைப் பார்த்து சிரித்தது
அடேய் மடையா! எப்பொழுது
உன்னால் என்னிடம் பேச
முடிகிறதோ!
அப்பொழுதே உன்னை நான்
பிடித்துக் கொண்டேன்
அழாதே! கண்ணை துடைத்துக் கொள்
காதலிப்பவனால் தான் என்னிடம்
பேச முடியும்
இனி வேறு ஒன்றும் செய்ய முடியாது
என்றது…

தமிழ் ராஜா எழுதியவை | பெப்ரவரி 13, 2009

காதலிக்க பழகலாம்

காதலிக்க பழகலாம் என்றேன்
பழகிப் பார்த்து காதலிக்கலாம் என்றாய்
காதலால் பழக்கம் உண்டு 
பழக்கத்தால் காதலுண்டோ?
கேள்விக்குறி மனதில்
குழந்தையின் கண்ணாடி பருவம் போல்
உன்னில் என்னை பார்த்து உணர்ந்த
காதல் பருவத்தில் இனி ஒரு முறை
அந்த அரிதான நொடிகள்
நிகழப் போவதில்லை
சிரித்துப் பழகும் குழந்தை போலே
நான் காதலிக்க பழகும் குழந்தை
அழுது அடம் பிடிக்கும் என் 
அகபாவத்தை புறத்தில் பாவனை
செய்வது குழந்தைப் போல்
என்னால் இயலாது
நீ சொல்லும் பழக்கம் 
என் காதலுக்கு இல்லை
நான் உணர்த்தும் காதல் 
உன் பழக்கத்தில் இல்லை
எனக்கான காதலும் உனக்கான பழக்கமும் 
ஒரே வழித் தடத்தில் 
நிகழப் போகும் நொடிகள்
நீ குழந்தையாய் இருப்பாய் 
என்னைப்போல் காதலில்

தமிழ் ராஜா எழுதியவை | ஆகஸ்ட் 26, 2008

உன் சத்தமிடாத மௌனம்

என் உறக்கத்தை இயக்கும் இரவு
என் உயிரை இயக்கும் இதயம்
இரண்டிற்கும் இடையில் நீ
வந்து ஏன் இயங்க மறுக்கிறாய்
என்னுள் அமைதியை இயக்கும்
முயற்சியை நான் செய்கிறேன்
அந்த முயற்சியை உன் சத்தமிடாத
மௌனம் களைத்துவிடுகிறது
உன் சத்தங்களில் தான் என்
மௌனம் இயங்குகிறது.
மெல்ல மெல்ல உன் சிரிப்பின்
சத்தம் என்னை அமைதி
படுத்துகிறது.
உன் இயக்கத்தில் தான் என்
அமைதி
அமைதியில் என் உறக்கம்
என் உறக்கத்தில் தான் உன்
உயிரின் இயக்கம் உணர்கிறேன்
என் இதயத்தில்…
தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 9, 2008

உன் அன்பினை நிரப்ப வருவாய் என………………

 

 

உனக்கான வார்த்தைகளை நான் 
தேடுவது இப்பொழுதெல்லாம் 
குறைந்து விட்டது. 
வார்த்தைகளின் தோல்விகள் 
என் நெஞ்சில் எந்த சலனத்தையும் 
உண்டு செய்யவில்லை 
அதற்கு மாறாய் உன் மீதான 
புரிதலைத் தான் ஆழமாக்கியது 
உன் மௌன குறியீடுகளில் 
உள்ள அன்பின் நீண்ட வாசகங்களை போல் 
உன் வார்த்தைகளுக்கு என் மனதை 
ஊடுருவும் சக்தி இல்லை
இறப்பின் சுவையறியும் பொழுது
தான் என் மனதில் உனக்கான
நேசிப்பின் துளிர்வை உணர்ந்தேன்
மனதின் வெறுமையான பக்கங்களை
நீ மட்டுமே நிரப்புவதாக உணர்ந்தேன்
உன் சுவாசப் பையினை நிரப்ப
வேண்டிய உயிர் காற்றினை
சுமந்தபடி நிற்கும் மரம் நான்
உன் நிழலுக்காக காத்திருக்கிறேன்
இலைகளற்ற கிளைகளில் உன் 
அன்பினை நிரப்ப வருவாய் என………………

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 4, 2008

யாரிடமும் சொல்லிவிடாதே!

என் வாழ்க்கை எப்படி போகும்
உன் சொல்லால் பாதைகள் மாறும்
கனவாய் நீ இல்லை உயிராய்
உள்ளிருந்து மனமாய் இயங்குகிறாய்
பொய்யை மறைக்கின்றேன் நான்
இருப்பதாக இந்த உடலில்
உண்மையில் நீயே எனை
ஆட்கொண்டாய் உன் பார்வையில்
யாரையோ கூப்பிட்டு விட்டு
என்னை அழைத்தேன் என்கிறார்கள்
எனக்கு செவிகள் வேலை செய்யவில்லை
என்று என் நண்பர்கள் சொல்கிறார்கள்
நல்ல வேளை செவிகள் மட்டும் தான்
அவர்களுக்கு தெரிந்திருக்கிறது
என்னுயிரே வேலை செய்ய வில்லை
என்பது உனக்கும் எனக்கும் மட்டுமே
தெரியும்……………..
தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதே!

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 4, 2008

உன் சிணுங்களை

பார்க்கக் கூட வெட்கப் பட்டால்
உனக்கு என் முகம் மறந்துவிடாது
என்றதும் , ஒரு பார்வைப் பார்த்தாயே நீ!
என் ஆயூளில் மறக்க முடியாது
அந்தப் பார்வையை…
என்னப் பேசுவது என்றுத் தெரியாமல்
விழித்த என்னைப் பார்த்து
பயந்துட்டி யா? என்றாயே
குல தெய்வத்தைப் பார்த்து
யாரேனும் பயப்படுவார்களா?
ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியில்
லேசாகப் புன்னகைத்தாய் நீ!
என்னை தெய்வம் என்றா சொல்கிறாய்
அப்படியென்றால் எனக்கு கோவில் எங்கே?
என இரு கைகளையும் சேர்த்துக் காட்டினாய்…
என் இடப் பக்க மார்பில் கை
வைத்து நான்காட்டினேன் இங்கேயென்று!
உன் முகம் சற்றே ஒரு சிணுங்களை
வெளிப்படித்தியது.
என் நினைவுப் பெட்டகத்தில்
ஒரு நொடியில்
பதிவு செய்யப் பட்டது
அந்தக் காட்சி
இன்னும் ஒரு முறையென்று மனம்
ஏங்க , மீண்டும் முயற்சியில் இறங்கியது
உதடுகள் அந்த சிணுங்களை காண…

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 4, 2008

என் நிகழ்வுகள்

அவள் நாசிகளை தொட்ட காற்றை
சுவாசிக்கவே நான் வாழ்கிறேன்
அவள் மனதினை அசைக்கவே
என் ஒவ்வொரு அசைவுகளும் நிகழ்கிறது
அவள் நீரோட்டமான மனதில் என்
நிகழ்வுகள் பாசிப் போல் பசுமையாக
இருக்கவே பாடுபபடுகிறேன்
அவள் இதய துடிப்பில்
என் காதல் அணுஅணுவாய்
நுழைத்திடவே காத்திருக்கிறேன்
அவள் நிழலிணை
என் உயிர் தொடர்ந்திடவே
ஒவ்வொரு நொடியும் முயல்கிறேன்
அவள் மொழிகளை
என் மனதில் பதித்திடவே
ஒவ்வொரு எழுத்தையும் நேசிக்கிறேன்
அவள் முகத்தினில்
என் முகம் பிரதிபலிக்கவே
சுடரில் புறப்பட்டஒளியாய் திரிகிறேன்
அவள் இதழ் சிந்தும் நீரை
சுவைத்திடவே தேன் மொய்க்கும்
வண்டுகள் தேடி அலைக்கிறேன்
அவள் காதினில் நுழையும் ஓசையில்
என் மொழி கலந்திடவே
மென்மையான காற்றாக்கிறேன்
அவள் மடி மீது கண் உறங்கிடவே
என் உயிர் மொத்தத்தையும் உறங்க வைக்கிறேன்

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 3, 2008

நட்பின் மௌனங்கள்

 

நட்புக்கு நாகரிகம் இருக்குமானால்
அது உன்னிடம் தோற்றுவிடும்                                                                                                                    பேச முயன்றும் உதடுகள்                                                                                                                      திறவாத நொடிகளில் நெஞ்சினுள்ளே                                                                                                   லேசான வலியை உணரும் பொழுதெல்லாம்                                                                                     காற்றை  வெறுத்ததுண்டு                                                                                                                                               என் நெஞ்சினுள்ள வார்த்தையை                                                                                                         ஏன் ஒலி அலைகளாக மாற்றவில்லையென்று…                                                                                                                    காற்று கூட வெளி வார்த்தைக்குத் தான்                                                                                                   மதிப்பளிக்கிறது                                                                                                                                             மௌனத்தை இசைக்கும் அசைவு                                                                                                            காற்றில் இல்லையா?                                                                                                                                 உன் காதில் இல்லையா?

நட்பின் மௌனங்கள் உணரப்படாதபொழுது
வார்த்தைகளுக்கு மட்டும்
வலிமையுண்டோ! வீண்…
தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 3, 2008

பூக்களின் பாதுகாப்பு


நமக்குள் நட்பு வளர்ந்த நொடிகளை
கடிகார முற்கள் கணித்ததில்லை
நாடிகளில் செல்லும் ரத்த
ஒட்டங்களே அதற்கு சாட்சி
வருத்தத்தின் விபரீதங்கள்
அறியாததினால் உன்னிடம்
பேசாத நாட்கள்
ஒட்டு மொத்த வருத்த்தின்
கடிதங்களும் என் இதயமுகவரிக்கு
வந்தது போல் ஓர் உணர்வு
சொற்களும் குத்து மென்று
இது வரை அறிந்ததில்லை
“மன்னிப்பு” என்று நீ முதலில்
சொல்லும் வரை…
நான் செய்த தவறுக்கு

தமிழ் ராஜா எழுதியவை | ஜூலை 3, 2008

உண்மையடி நீ எனக்கு

ஒன்றிரண்டு வாசகங்கள்
உன்னைப் பற்றி நானெழுத
வெள்ளைத் தாளில் ஓடு மடி
கவிதை என்ற பேரருவி
சிந்தி விழும் துளி சிரிப்பும்
உன்னுடனே உறவு சொல்லும்
பொத்தி வைத்த ஆசையெல்லாம்
நீ நடக்கக் கூட வரும்
கற்பனைக்கு கரு அமைய
உன்னை பற்றியே நினைத்திருக்கும்
கண் விழிக்கும் நேரமெல்லாம்
உன் முகமே சுற்றி நிற்கும்
எதை பற்றி நானெழுத
உன்னிடம் பொய்யுரைக்க ஆசையில்லை
உண்மையடி நீ எனக்கு காதலியே!

பழைய பதிவுகள் »

வகைகள்