The WordPress.com stats helper monkeys prepared a 2011 annual report for this blog.

Here’s an excerpt:

A New York City subway train holds 1,200 people. This blog was viewed about 3,700 times in 2011. If it were a NYC subway train, it would take about 3 trips to carry that many people.

Click here to see the complete report.

இது என்ன புது உணர்வு
எதைக் கொடுப்பது நான்…
நீ என்னிடம் எடுத்துச் சென்றது
திரும்பப் பெற முடியாத உணர்வுகள்
அல்லவா…
அப்படியிருக்க என்னிடம் நீ
எதைக் கேட்கிறாய் பெண்ணே!
கொடுத்த சில பொருட்களைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு
எல்லாவற்றையும்
நான் கொடுத்துவிட்டேன்…
இத்துடன் என்னை மறந்துவிடு என்கிறாயே….
என்னிடம் அன்று நீ பொருட்களை
மட்டும் தானா பெற்றாய்…
என்னை விட்டு வேறு யாரையாவது
பார்த்துக் கொள்ளுங்கள்
என்று சொல்கிறாயே…
மனம் என்ன காதலின் விருந்தாளியா?
ஒவ்வொரு முறையும் அழைத்து உபசரிக்க…
அது உயிரின் கோவில் அல்லவா
வழிபாடு எவ்வளவு வேண்டுமானாலும்
இருக்கலாம்
அதில் உருவம்
ஒன்று தானே இருக்க முடியும்
என்னிடம் இருக்கும் அத்தனைக் காதலுக்கும்
முழு உருவம் நீ தானே
என் மனதின் அடி ஆழங்களை
என் அந்தரங்கங்களை
எவ்வித போலியுமின்றி
ஒளிவு மறைவுமின்றி
உன்னிடம் மட்டுமே பகிர்ந்திருக்கிறேன்…
உடல் நிர்வாணத்தை காட்டிலும்
நம் உள்ள நிர்வாணத்தை பகிர்தலில்
தான் நம் ஒவ்வொரு காதல் தருணமும்
நகர்ந்தது….
இனியொரு முறை என் உள்ளத்தை
வேறு யாருடனேயும் என்னால் பகிர
முடியுமென்றால் நான் போலியாகத் தான்
இருக்க முடியும் பெண்ணே!
என்னை போலியாக்கிவிட்டு நீ
மட்டும் உண்மையாக எப்படி இருக்க
முடியும்…?
எனக்குத் தெரிகிறது உன் நடிப்பு
ஆனால் உனக்கு எப்பொழுது தெரியப்
போகிறது நீ நடித்துக்
கொண்டிருக்கிறாய் என்பது,
காலம் நிச்சயம் எதேனும் ஒரு
தருணத்தில் உன் போலித் தனத்தை
உனக்கு சுட்டிக் காட்டலாம்
அங்கே நீ என்று சொல்வதற்கு
உன் நினைவுகள் கூட உன்னிடம் இருக்காது
அந்நொடி நீ சிந்த கண்ணீர் கூட
உனக்குத் துணைக்கு வராது.
விதைகளை விற்று
விறகுகள் வாங்குகிறோம்
சதைகளை வளர்க்க
எலும்பினைத் தேய்கிறோம்
விலையினைக் கொடுத்தா
ஞானம் வாங்குவது
மலரனில் தேய்தா
முற்களைக் கூராக்குவது
இந்திர வலிமையால்
இயக்கத்தை இழக்கிறோம்
தொழில் மூலப்பொருளை
பலர் ரத்தத்தில் எடுக்கிறோம்
பணம் பார்க்கும் பன்னாட்டு
வாணிபத்தில் மனிதத்தை தொலைக்கிறோம்
இந்நாட்டு பொருளை ஏளனம் செய்துவிட்டு
வல்லரசை நோக்கி பயணிக்கிறோம்
தொடரட்டும் பயணம் கால்கள்
செயலிழக்கும் வழி விபரிதங்களால்…..

உங்களுக்கு என்னைத் தவிர
உலகத்தில் வேறு எதுவும்
கண்ணுக்குத் தெரியாதா?
கோபமாகக் கேட்டாய் நீ…
பெண்ணே!
உலகத்தை விட்டு வெளியில்
வந்துப் பார்த்தால் தான் உலகம்
தெரியுமாம்
என் உலகமான உன்னையோ
நான் உன்னிலிருந்தே பார்க்கிறேன்
எனக்கு உன்னைத் தவிர வேறெதுவும்
தெரியவில்லையடி
நான் என்ன செய்ய…?
என் முதல் பசியை ஆற்றிய
தாய்பாலின் ஒரு துளியிலிருந்து
வந்ததடி இந்த உணர்வு
என் தாயைத் தவிர வேறெவரையும்
காண சகியாத நாட்கள்
கண்ட மனிதர்களிடமும் தாயைக்
காணத் துடித்த உணர்வுகள்
அத்தனையும் இன்று உன்னிடமும்
விழித்தெழுந்து என்னை உன்னை
நோக்கியே திருப்புகிறது
என்ன செய்வது …?
என்றேன்
ஒன்றுமே புரியாமல்
என்னையேப் பார்த்தாய்
கருவை சுமந்தறியாத
ஒரு தாய்மை உன் கண்களில்
தெரிந்தது.
வார்த்தைகளற்ற
அந்த மௌனமான நேரத்தில்
தான் நம் காதல் அடிக்கடி
தன்னைப் புதுப்பித்துக் கொள்வதை
உணர முடிகிறது.
நம் காதலில் நீ தாய் நான் சேய்
நானும் சில நொடிகளில் தாயாகலாம்
நீ சேயாகும் பொழுது…
அந்த நொடிகளை நீ அவ்வளவு
எளிதில் எனக்கு விட்டுக் கொடுப்பதில்லை
என்றதும்
சட்டென்று
என் மார்பில் தலையை
சாய்த்து உன் முகத்தை மறைத்து
கொண்டாய்…
என் நெஞ்சில் லேசான குளிர்மையை
உணர்கையில் தான் தெரிந்தது
அந்நொடி நம் காதலில்
நீ சேயானாய் …
நான் தாயானேன்

அது ஒரு காதல் தருணம்
மனம் எங்கிருக்கிறது என
என் உயிரின் ஒவ்வொரு துளியும்
ஆராய்ந்துக் கொண்டிருக்க…
அது உன்னிடம் இருப்பதாக
என் உடலில் உள்ள கண்ணுக்குத் தெரியாத
நுண்ணிய அணுக்கள் ஒவ்வொன்றும்
சத்தம் போட்டு சொல்லிக் கொண்டிருந்தன
என் ஆன்மாவின் இருக்கையான
இந்த உடலிலும்,உயிரிலும் ஒரே
சமயத்தில் மின்சாரம் பாய்ந்து
என் ஒட்டு மொத்த உணர்ச்சியையும்
உன்னை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தன
உன்னைப் பார்க்கத் துடிக்கும் உணர்வும்
உன்னைப் பார்க்க மறுக்கும் உணர்வும்
எனக்குள்ளேயே என்னை இரண்டாகப்
பிரித்துப் போட்டு எனக்குள்ளேயே ஒரு
மிகப் பெரிய யுத்ததை நடத்திக் கொண்டிருந்தது
உன் ஒற்றைப் பார்வையை சந்திக்கத் தான்
என் பார்வையின் எந்த வீச்சும் துணியவில்லை
இந்த பயம் என் உயிரில் வந்ததா
இல்லை என் ஆன்மாவிலேயே வந்ததா…
இல்லை இது ஒட்டு மொத்த ஆணினத்திற்கே
பெண்ணினத்தின் மேல் உள்ள பயமா…?
உன்னிடம் எதனால் எனக்கு பயம்
வருகிறது…
உன் பார்வையை சந்திப்பதை விட
மரணத்தைக் கூட எளிதில் சந்தித்துவிடலாம் போல்
இருக்கிறதே…
மரணத்தை காட்டிலும் அவ்வளவு கொடுமையானதா
உன் பார்வை…
உலகத்தில் மிகக் கொடுமையான நொடிகள்
நம்மை நாமே கேள்விக் கேட்டுக்
கொண்டு பதிலை நாமே உருவாக்கிக் கொள்வது தான்…
அந்த கொடுமையும் உன்னால் என்னுள்
நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது…
ஒரு வேளை இது மறுபிறப்போ…
ஒரு பெண்ணில் இருந்து இந்த உயிர்
உருவம் பெற்றது போல்…
உன்னில் இருந்து இந்த உருவம்
புது உயிர் பெறுமோ…
அந்த உணர்வால் தான் என்னால்
உன்னை நோக்கி செல்லும் பார்வையை
தடுக்க இயலவில்லையோ…
என் உயிருக்கு புது உருவம் தரப் போகிறாயா?
இல்லை என் உருவத்தில் உள்ள
உயிரை எடுக்கப் போகிறாயா…?
மருத்துவனைக் கண்டு நோயுற்றவன்
தன் நிலையை சொல்லத் தயங்குவது போல்
உன்னைக் கண்டு என் மனநிலையை
சொல்லத் தயங்கிக் கொண்டிருக்கிறேன்
எப்படிச் சொல்வதடி உன்னிடம்
இந்த உலகத்தில்
நீ மட்டும் தான்
எனக்குப் பெண்ணாய் தெரிகிறாய்
ஒரு பெண் மட்டும் தான் 
எனக்கு உலகமாகவே
தெரிகிறாள்  என்று…


 

 
 
 
 
 
 
 
 
 
 
அது ஒன்றும் பேருந்து நிறுத்தமல்ல
பேருந்து நிலையம்…
அன்று நாம் ஒவ்வொரு நகரும் பேருந்தில்
இருந்தும் நின்றிருக்கும் பேருந்துக்கு
மாறி மாறி அமர்ந்ததிலேயே நம்
காதல் பொழுது சென்றுக் கொண்டிருந்தது…
சற்றே சலித்துக் கொண்ட நீ
போதும் இனி என்னால் முடியாது என்றாய்…
எல்லோரும் நம்மையே பார்க்கிறார்கள்
எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது
எல்லோரும் நம்மைப் பற்றி
என்ன நினைப்பார்கள்
என்றாய்…
பார்க்கட்டுமே நம்மை மட்டும் தானா
பார்க்கிறார்கள், இப்படி எத்தனையோ
காதலை இவர்கள் கண்கள் பார்த்துக்
கொண்டு தான் இருக்கிறது
அதற்காகவெல்லாம் நாம் காதலிக்காமல்
இருக்க முடியுமா?
என்றேன்…
இப்படி பொதுஇடத்தில் அலைவது
தான் காதலா?
என்றாய்…
பின்னே தனி இடத்தில் இருவருக்கிடையே
நிகழ்வது வேறாயிற்றே…
அதை யாரும் பார்க்கக் கூடாது…
நம் காதலைத் தான் இவர்கள் பார்க்க
முடியும்…
என்றதும்
உன் முகம் கோபத்தால் சிவந்தது
மோசம் என்றாய்…
எது மோசம் உன்னைப் பொதுஇடத்தில்
சந்திப்பதா?
இல்லை தனியிடத்தில் இன்னும் சந்திக்க
வில்லையே என்பதனாலா?
என்றேன்
உம், அந்த ஆசை வேறு இருக்கிறதா?
திருடா?
என்றாய்
இது என்ன வம்பாயிருக்கிறதே…
ஆசையில்லாமல் காதலிக்க முடியுமா?
இதோ இப்பொழுது கூட உன் அந்த
அழகிய கன்னத்தில் என்று சொல்லி
கைகளை அவள் கன்னத்தின் பக்கத்தில்
கொண்டு செல்ல, அவள் வெடுக்கென்று
தன் கையால் என் கையைப் பிடித்துத்
தள்ளி சே! யாராவது பார்க்கப் போகிறார்கள்
என்றாய்….
நான் சிரித்தேன்…
என்ன… என்னவென்று இரு முறை கேட்டாய்?
இல்லை உன்னை நான் தொடவே இல்லை
அதற்குள் என்னை முதலில் தொட்டது
நீ தான்…
என் கைகளைத் தட்டிவிட்டு யாராவது
பார்த்துவிடப் போகிறார்கள்
என்று வேறு சொல்கிறாய்…
அப்படியென்றால் யாராவது பார்த்து
விடப் போகிறார்கள் என்பது தான்
உனக்கு பிரச்சினையாக இருக்கிறது
என்றதும்
சட்டென்று உன் முகம்
மாறிய நளினங்களை
என் கண்கள் ரசிக்காமல்
இல்லை.
உன் உதடுகள் பேச முடியாமல்
தவித்தது…
உன் கண்கள் என்னை நேராக
சந்திக்க முடியாமல் தயங்கியது…
உன் தலை நாணத்தால் கவிழ்ந்தது
இந்த பெண்களே இப்படித் தான்
எல்லா ஆசையையும் மனசுக்குள்ளேயே
வச்சிக்கிட்டு ஆசையே இல்லாத
மாதிரி நடிக்கிறது…
என்றதும்…
“உன்னை” என்று பொய் கோபத்துடன்
என்னை அடிக்க கையை ஓங்கினாய்…
நான் தடுக்க நினைக்க…
சுற்றும் பார்த்துவிட்டு ,எடுத்த கையை
நிறுத்திவிட்டு…
போதுமென்று…!
செல்லமான கோபத்துடன்
உன் முகம் சிவக்க ஒரு
பார்வைப் பார்த்தாயே…
அது என் பார்வைக்கு மட்டுமல்ல
என் காதலுக்கே புதுசு…

 
 
 
 
 
 
 
 
 
உன்னை நான் பார்த்து விடக்கூடாதென்று
எத்தனை முயற்சி எடுக்கிறாய்
நான் வீட்டிற்குள் வரும் நேரம்
தான் உனக்கு மாவு அரைப்பது
ஞாபகத்திற்கு வரும்
நான் வெளியில் போகும் பொழுது
உனக்கு ஊற வைத்த துணி
ஞாபகத்திற்கு வரும்
நான் பேசும் பொழுது உன்
காதுகளுக்கு மட்டும் அடுப்பங்கறையில்
இருந்து ஒலி கேட்கும்
நான் விடுமுறை என்றால்
அப்பொழுது தான் உனக்கு
தலைவலி ஞாபகத்திற்கு வரும்.
இப்படி நமக்கான தனிமையெல்லாம்
சென்றுக் கொண்டே இருக்கிறது.
உள்ளுக்குள் உன் அருகாமையை
எண்ணி புலம்பும் ஒரு உயிர் இருப்பதை
ஏன் உன்னால் உணர முடியவில்லை.
என் பார்வைக்கருகில், அருகாமையில்
பேசிக் கொண்டிருக்க உனக்கு விருப்பமில்லையா?
என்று ஒரே ஒரு முறை தான் கேட்டேன்
அதுவும் மனம் தாங்காமல்
அந்நொடி நீ சிந்திய கண்ணீர் சொன்னது
உன்னுடைய அத்தனை அன்பையும்…

 

 

 

 

 

 

 

 

நீ கேட்பதற்காகவே வைத்த என்
அலைப்பேசியின் ஒலி நாதத்தை
உன்னைத் தவிர எல்லோரும் கேட்கிறார்கள்…
நீ மட்டும் இன்னும் கேட்கவில்லை
தவறாக என் எண்ணுக்கு அழைக்கும்
நபர்கள் கூட சரியாக கேட்கும் என்
அலை நாதத்தை நீ மட்டும் இன்னும்
ஒரு முறைக் கூட
கேட்காதது வருத்தம் தான்…
என்றேனும் நீ என் அலைப்பேசி
எண்ணுக்கு அழைக்கும் பொழுது
இந்த ஒலி நாதத்தை நீ
நிறைய முறைக் கேட்பாயெனில்
நான் எடுக்க இயலாமல் இருக்கிறேன்
என்று எண்ண வேண்டாம்
உயிரோடு இருக்க முடியாமல் இருக்கிறேன்
என்பதை எண்ணிக் கொள்ளடி
என் அன்பு காதலியே…
அந்த ஒலி நாதம்  உனக்கு சொல்லும்
என் உயிர் நாதம் நின்று விட்டதை
அந்நொடி..

2010 in review

Posted: அக்டோபர் 8, 2011 in நான் பதிவு செய்ய
குறிச்சொற்கள்:, , ,

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Fresher than ever.

Crunchy numbers

Featured image

A Boeing 747-400 passenger jet can hold 416 passengers. This blog was viewed about 4,000 times in 2010. That’s about 10 full 747s.

In 2010, there were 11 new posts, growing the total archive of this blog to 56 posts. There were 14 pictures uploaded, taking up a total of 2mb. That’s about a picture per month.

The busiest day of the year was February 24th with 76 views. The most popular post that day was இயற்கை.

Where did they come from?

The top referring sites in 2010 were ta.wordpress.com, orkut.co.in, tamilveli.com, saram.vaarppu.com, and valaipookkal.com.

Some visitors came searching, mostly for முத்தம், ரோஜா, இயற்கை, கவிதை, and கவிதை எழுத.

Attractions in 2010

These are the posts and pages that got the most views in 2010.

1

இயற்கை August 2007

2

ஒரு முத்தம் June 2007
4 comments

3

உன் ஞாபகம் April 2008
2 comments

4

உன் வரவு August 2007
2 comments

5

புது வீடு குடிபோகும் பொழுது March 2010
2 comments


கொஞ்ச நேரமே பார்க்க நேர்ந்தாலும்
அந்த அரிதான நொடிகளை
மனம் அழகாய் ரசிக்கப் பழகிவிட்டது
சந்திப்புகளில் மட்டுமே திருப்தியடைந்த
மனம் இப்பொழுதெல்லாம்
சந்திப்பில்லாத கணங்களிலும்
நட்பால் திருப்தியடைகிறது
பார்த்து பார்த்து பழகிய வயது
போய் ,பார்வைகளின்றியும்
நட்பின் பகிர்தலை உணர்த்தும்
உனதான என் நட்பில்…
கொஞ்சம் பக்குவம் தெரிந்தாலும்
அழும் குழந்தையாகவே என் மனம்
கேட்கிறது.
இப்பொழுதும்
திரும்பவும் சந்திக்கும் தருணங்களை…
இது நட்பின் குழந்தைதனமா?
இல்லை
குழந்தைத் தனம் தான் நட்பா?